
இலங்கை அரசிற்கு எதிராக இரண்டு வகையான குற்றங்கள் முன் வைக்கப்படுகின்றன.
1) போரின் போது நிகழ்த்திய படுகொலை (முள்ளிவாய்க்கால் புதுமாத்தளன் புதுகுடியிருப்பு)

முன்னையதை கொசோவோ பாணியிலும் பின்னயதை நாஸி தடுப்பு முகாம்கள் பாணியிலும் நிகழ்த்தப்பட்டதிற்கு ஒப்பானதாக நிறுவப் பார்க்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

ஆனால் இங்கு பிரச்சனையே வேறு. போர்க் குற்றம் சுமத்தப்பட்ட நாட்டின் அதிபரிடமே இதை விசாரணை செய்யுமாறு வலியுறுத்துவது நகைப்புக்கிடமானது. இதற்கு பின் புலத்தில் அமெரிக்க மெக்கானிஸம் காணப்படுகிறது.

இலங்கை அரசிற்கு ஆர்வமூட்டி அறிவூட்டி ஆயுதமளித்து ஏனைய வசதிகளனைத்தையும் அளித்து ஆசீர்வதித்து களமிறக்கியது யார்? அமெரிக்கா இந்தியா சீனா பாகிஸ்தான் ஈரான். ஆனால் குற்றவாளி மட்டும் இலங்கை. அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையை நட்டாற்றில் கைவிட்டு மனித உரிமை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதிற்கு சமம்.

அவர்கள் வசம் உள்ள அதி சக்தி வாய்ந்த செய்மதிகளின் திறனால் முன் கூட்டியே தெரியும் நடக்கப் போவது என்ன என்று. நடக்க முன்பும் தடுக்கவில்லை. நடக்கும் போதும் தடுக்கவில்லை.
அடைக்கலம் நாடி வந்த பெண்ணை அபயமளித்து தேவையேற்படும் போதெல்லாம் பலாத்காரமாக கற்பளிப்பது போல் தான் அமெரிக்கா ஐ.நா. சபையை தனக்கு வேண்டிய வேளைகளின் போதெல்லாம் நினைத்தாவாறு ஆட்டுவிக்கிறது. பான் கீ முன்னை ஆடச்சொன்னால் ஆட வேண்டும். அவிழ்க்கச் சொன்னால் அவிழ்க்க வேண்டும். அவர் இதுவும் செய்வார் இதற்கு மேலும் செய்வார்.


இதில் பாவம் தமிழர்களே. ஐ.நா. தமிழர்களிற்கு நீதி வழங்கும் நியாயம் வழங்கும். மஹிந்த அரசை கூண்டோடு சதாம் ஹீசைனைப் போல கயிற்றில் தொங்கவிடும் என கடைசி நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.
ஐ.நா. உலக வரலாற்றில் எங்குமே நீதியா செயற்பட்டதில்லை என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிக்கு புரியாமல் போவது வியப்பானதே.
நன்றி;கைபர் - அபூ மஸ்லமா
1 comments:
அருமையான எதார்த்தமான கட்டுரை உங்கள் கட்டுரையை நான் நகல் எடுத்துள்ளேன் - நன்றி.
Post a Comment