கடலில் இந்திய மீனவர் 100 பேர் கைது!

Tuesday 15 February 2011

இலங்கையின் வட மாகாண கடல் பிரதேசத்துக்குள் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் சுமார் 100 பேர் வரையானோர் இன்று மாலை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
 

 பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸார் இத்தகவலை வழங்கினார்கள்.

இந்திய மீனவர்களின் அத்து மீறலை இலங்கை மீனவர்கள் கண்டு இருக்கின்றனர்.

பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். கடல் படையினரின் உதவியுடன் பொலிஸார் இந்திய மீனவர்களை கைது செய்து உள்ளனர்.

0 comments:

Post a Comment