மீண்டும் புலிகளின் தனிமங்களை உசுப்பேத்தியிருக்கிறது.

Wednesday 26 January 2011

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை சென்ற மாதம் 7ம திகதி
வெள்ளிக்கிழமை 2011ல் புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது அங்கு இலண்டனிலுள்ள முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பஷீர் சட்டத்தரணி (இலங்கை) சொலிசிட்டர் (இங்கிலாந்து) சாட்சியமளித்தார். அவரின் சாட்சியத்தில் ஒரு எடுபகுதி (excerpt) இங்கு பதிவிலிடப்பட்டுள்ளது விரிவாக பார்க்க
இலங்கை மக்கள் அதிகளவில் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடான ஐக்கிய ராச்சியத்தில் கடந்த இரு தசாப்தங்களாக வாழ்ந்ததுடன் அங்கும் புலிப் பயங்கரவாதத்தின் செயற்பாடுகளை எதிர்ர்கொள்ள நேரிட்டது. புலிகளை பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாக நான் பல்வேறு சபைகளில் ஊடகங்களில் கூறி வந்ததன் காரணமாக எனது வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருந்தது
புலிப் பயங்கரவாதிகளின் தனிமங்கள் (elements) என்னை அல்கைடா பயங்கரவாதி என தங்களின் ஊடகங்களில் எனக்கெதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டனர் என்பதுடன் எனது வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்தனர் , அதனால் நான் இலண்டலில் உள்ள ஸ்கோட்லாந்து போலீஸ் நிறுவனத்துடன் எனது பாதுகாப்பு கருதி முறைப்பாடு செய்ய நேரிட்டதுடன் அவர்கள் எனக்கு பாதுகாப்பும் வழங்கினார்கள். ஆனால் இந்நிலைமை மே பதினெட்டாம் திகதி 2009க்கு பின்னர் மாற்றமடைந்தது. அம்மாற்றமானது அண்மையில் புலிகளின் சார்பு தனிமங்கள் ஊடகங்களின் தீவிர எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி அவர்களின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (Student Union of Oxford University) நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது
இச்செயற்பாடு மீண்டும் புலிகளின் தனிமங்களை உசுப்பேத்தியிருக்கிறது. புலிகளின் ஆதரவுத் தளங்கள் மிகப் பலமாகவே ஐக்கிய ராச்சியத்தில் இருந்து வந்துள்ளது. தமிழ் தேசியவாதிகளும் அவ்வாறே இங்கு பலமாக செயற்பட்டுள்ளனர்.. அந் நிகழ்வில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகம் சார்பாக நானும் அங்கு உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். ஆனால் அவ்வாறான எதிப்பும் மீளினக்கத்துக்கு எதிரான செயற்பாடுகளும் இலங்கையில் காணப்படும் யதார்த்த சூழ்நிலைக்கு ஒத்திசைவாகவில்லை, இங்கு காணப்படும் சூழல் முற்றிலும் மாறுபட்டதுடன் இங்கு காணப்படும் மீளிணக்க சூழ்நிலைக்கு புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் , தமிழ் தீவிர தேசிய வாத செயட்பாட்டளர்களின் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வினையையே உண்டாக்கும் என்பதை இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
நான் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவன் . எனக்கு அங்கு அடிமனதில் பதிந்த நினைவுகள் இன்னும் கிளர்கின்றன. 1972ம் ஆண்டில் நான் சிங்களம் படிக்கக் கூடாதென்று நிர்பந்திக்கப் பட்டேன். எமது பாடசாலை சிங்கள ஆசிரியர் திரு .லயனல் எவ்வாறு மனக் கிலேசத்துடன் வெளியேறினார் என்பதும் எனது ஞாபகத்தில் உறைந்திருக்கிறது. முஸ்லிம்கள் கிழக்கிலே தமிழ் பேசும் மக்கள் என தமிழ் கட்சிகளால் கருதப்பட்டனர். இதனை எம்.எச்.எம்.அஸ்ரபின் அரசியலிலும் சான்றாகவிருந்திருக்கிறது. அவர் தமிழர் கூட்டணியுடன் 1977 தேர்தலில் கூட்டமைத்து தமிழர் தாயகம் பெற போராட உறுதி மேற்கொண்டார்.
ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் அவரையும் அவரது சகாக்களையும் அவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் கொண்டிருந்த கூட்டு காரணமாக நிராகரித்தனர். முஸ்லிம் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் ஐக்கியத்துக்கும் ஆதரவாகவே செயற்பட்டுள்ளனர்.
சற்று பின்னோக்கி பார்த்தால் சமாதானத்தை கண்காணிப்பதில் தவறுகளை விட்டமைக்காக நோர்வேயின் கண்கானிப்பாளர்களை (Norwegian Monitors) நாங்கள் பொறுப்பாக்க வேண்டும். இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான உடனேயே முஸ்லிம்கள் கிழக்கின் மூதூர், வாழைச்சேனை போன்ற பல பாகங்களிலும் குறி வைத்து தாக்கப்பட்டனர். யுத்த நிறுத்த ஒப்பந்தம் தனது முன்னுரையில் ” முரண்பாடுகளில் தரப்பினர் அல்லாத குழுவினரும் முரண்பாட்டு விளைவுகளினால் துயருற்று வருகிறார்கள் என்பதனை தரப்பினர் உணர்கிறார்கள்.
இதுதான் முஸ்லிம் பிரஜைகளை பொறுத்தவரை உள்ள நிலைமையாகும். ஆகவே இந்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் குடிமக்களின் அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பு எல்லா வதிவிடத்தோருக்கும் ஏற்புடைத்ததாகும். என்பதற்கு எதிராகவே செயற்பட்டனர்.
( “The Parties further recognise that groups that are not directly party to the conflict are suffering the consequences of it. This is particularly the case as regards the Muslim population. Therefore, the provisions of this Agreement regarding the security of civilians and their property apply to all inhabitants”).
2006 ம ஆண்டு மூதூரில் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து தேவை எழுந்த போதும் ; அவ்வாறே புலிகளிலிருந்து பிரிந்த சென்ற கிழக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது பிரதான புலி அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்றபோதும் கண்காணிப்பு குழுவினர் அப்பிரதேசத்தை விட்டு நீங்கிச் சென்றதுடன் புலிகளின் மிலேச்சதனத்துக்கு ஆதரவளித்தனர், தமது கண்காணிப்பு கடமைகளிருந்து தவறினர். கண்காணிப்பு குழுவினர் வேண்டுமென்றே 2006 ஆம் ஆண்டில் மூதூரிலிருந்து வெளியேறினார்கள்
போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் செயற்பட்ட கண்காணிப்புக் குழுவினர் அப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் இருப்பைப் பலி கொடுத்துத்தான் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.
புலிகளினால் யுத்த நிறுத்த உடன்பாடுகள் மீறப்பட்ட போதெல்லாம் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களே தங்களின் உயிர்களையும் உடைமைகளையும் பலியிட வேண்டி நேரிட்டது. இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியபோதும் இதுவே முஸ்லிம்களுக்கு நடந்தது. 1980 களின் பிற்பகுதிகளில் தமிழ் ஆயுத குழுக்களான ஈ.பீ ஆர் .எல் எப் ;,(E.P.R.L.F) ஈ .என். டி .எல். எப்; (E.N.D.L.F) புளட்,; (PLOTE) ஈரோஸ் (EROS) என எல்லா இயக்கங்களும் முஸ்லிம்களை பதம் பார்த்தனர்.
இந்நிலையிலே புலிகள் தாங்கள் முஸ்லிம்களின் நண்பர்கள் என்று பாவனை செய்து கொண்டு கிழக்கில் காலூன்றினார். ஆனால் அவர்களின் நட்பின் நிறம் மெதுவாக வெளிறத் தொடங்கியது அவர்களின் கொடூரங்கள் முஸ்லிம்களை கொன்றொழிப்பதிலும் வடக்கிலே வெளியேற்று வதிலும் உச்சநிலை அடைந்தது.
புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் முறிவடைந்த போதும் முஸ்லிம்கள் பெரும் விலையை கொடுத்தனர். 1990களில் முஸ்லிம்களை கிழக்கிலிருந்தும வடக்கிலிருந்தும் நீக்கி விடும் தீர்மானத்தை புலிகள் எடுத்தனர் என்பதை அவர்கள் முஸ்லிம்களை கிழக்கில் மிலேச்சதனமாக படுகொலை செய்ததிலும் வடக்கில் வெளி ஏற்றத்திலும் துலாம்பரமானது.
மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தையும் நான் ஆவணப்படுத்தி வைத்துள்ளேன். நான் புலிகளின் கொடூரத்திற் கெதிராக இலங்கையிலும் ஐக்கிய இராச்சியத்திலும் செயற்பட்டேன். புலிகள் சபாலிங்கம் போன்றோரை பிரான்சில் கொன்றது மாத்திரமல்ல அவர்களுக் கெதிராக செயற்பட்டோர் பலருக்கு உலகின் பல பாகங்களிலும் தீங்குமிழைத்தனர்.
இலங்கையில் ஆயுத போராட்டம் காரணமாக சகல சமூகங்கள் பாரியளவில் தங்களின் உயிர்கள் உடைமைகள் வாழ்விடங்கள் வாழ்வாதாரங்கள் என பலவற்றை இழந்து துன்புற்றுருக்கின்றன ஆகவே அவர்கள் யாவரும் தகுந்த முறையான நஷ்டவீடுகள் வழங்கப்பட வேண்டும், அவ்வாறு பாதிக்க பட்டோரின் மனத்தாங்கள்களை உடனடியாக ஆவனசெய்ய வேண்டும். சந்திரிகா அரசின் போது பிரேரிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்ட சீர்திருத்த சட்ட முன்வைப்பில் கூறப்பட்ட ஜூலை 1983 தொடங்கிய காலப் பகுதியிலிருந்து உள்நாட்டு யுத்தத்தினாலும் இன வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டோர் சகலருக்கும் உடனடி நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் தகவல் நடுவத்தின் தலைவர் என்ற கோதாவில் நான் பல சர்வதேச தொண்டர் நிறுவனங்களுடனும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள அரசியல்வாதிகளுடனும் கருத்துப்பகிர்வு செய்யும் சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்தன. எனது செயற்பாடுகளின் போது பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் புலிகளின் மீதும தமிழ் போராட்டம் மீதும் அனுதாபம் காட்டுவதையும் ஏனைய தமிழ் மாற்று கருத்தாளர்கள் புளிகளுககெதிராக அவர்கள் கொண்டிருந்த கருத்துக்காக எதிர் கொண்ட பிரச்சனைகளை கண்டு கொள்ளதிருந்ததையும் நான் பார்த்தேன். அதேவிதமான கொள்கையையே நோர்வேயின் கண்காணிப்பாளர்களும் அனுசரித்தது போல் தோன்றியது.
தமிழ் குறுந் தேசிய வாதம் இலங்கையின் அமைதிக்கும் இறைமைக்கும் சவாலாக அமைந்திருந்தது. மூன்று தசாப்தங்களாக குறுந் தமிழ் தேசியவாத அரசியலாலும் ஆயுதப் போராட்டங்களாலும் பாதிக்கப்படிருந்த கிழக்கு வாழ் மூவின மக்களும் கிழக்கின் தலைமைத்துவங்கள் அரசியல் தலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது தமிழ் தேசிய வாத அரசியல் மண்டியிட வேண்டி நேரிட்டது. யாழ் மைய வாத சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்ட தமிழ் குறுந் தேசியவாதம் பல்லின சமூக சூழலை கிழக்கிலே சிதைவடையச் செய்ததது.
தெற்கிலே ஏற்பட்ட இரண்டு ஆயுதப் புரட்சிகளில் பங்கேற்ற இளைஞர்கள் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல்வாதிகளாகவும் எழுத்தாளர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் மாறியுள்ளனர். அதேபோன்றுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டின் வளர்ச்சியின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு தமிழராக இருக்கிறார். இன்று இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் உண்மையுடன் ஈடுபட்டுவருகிறார். இது கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்குப் புது அனுபவமாகும். இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் மூலமாக தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர். அந்தளவுக்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது என்றார். அம்மக்களின் அக்கறைகளும் சாட்ட பூர்வமாக உறுதி செய்யப்பட்டு அனைவரும் இலங்கையர் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
சம உரிமை இன்மை, வறுமை, வேலையின்மை .அதிகார சமநிலை பேணப்படாமை, மனித வலு பறிப்பு (Deprivation of human resources) என்பன தெற்கில் இரண்டு ஆயுதப்போராடங்களுக்கு வழி கோலின. அவ்வாறே வட கிழக்கிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம் பெற்றன ஆனாலும் புலிகள் உலகின் எந்த பயங்கரவாத இயக்கத்துடன்னும் ஒப்பிடமுடியாத அளவு பயங்கரவாதத்தை நாடியது. வட மாகாணத்தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை கிழக்கு தமிழர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் “ஆயுதபோராட்டம்” முகிழ்க்கும் வரை செலுத்தினர் , அவ்வாறே ஆயுதப் போராட்டம் தொடங்கியவர்களும் ஆயுதத்தின் மூலம் அவ்வாறான அடக்கு முறையை அதே மக்கள் மீது மேற்கொண்டனர்.
நாங்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரையும் வெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறிக் கொண்டிராமல் பிரச்சினைகள் எவை என்று அடையாள படுத்தி கொள்ள வேண்டும் ஏற்கனவே சொல்லப்படுகின்ற பிரச்சினைகளுக்கு மூல காரணமாக விருந்த அல்லது அவ்வாறான பிரச்சினைகளாக இருந்தவை அல்லது அவ்வாறு இருப்பதாக நம்பப்பட்டவை இப்போதும அதே பரிமாணத்தில் இல்லை. இன்றைய பயங்கரவாதமற்ற சூழ்நிலையும் சமூகங்களுக்கிடையே நிலவும் பரஸ்பர புரிந்துணர்வும் ஐக்கியத்துக்காகவும் சமாதன சக வாழ்வுக்காகவும் ஊக்குவிக்கப் படுவதுடன் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும். இனவாத குறுந் தேசிய வாத அரசியலில் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்போர் இந்நாட்டு மக்களை தமது இனவாத அரசியலுக்கு பயன்படுத்த முனைவதற்கு இடமளிக்கக் கூடாது. பலர் இந்நாட்டில் இனங்களுக்கிடையே சமத்துவமின்மை தான் மிக அடி நாதமான பிரச்சினையாக இருக்கிறதென்று நம்புகிறார்கள். இனங்களுக் கிடையிலான தவறான புரிதலுக்கு காரணமாகும் காரணிகளை அடையாளம் கண்டு அரசியல் அமைப்பு சட்டவாக்கம் மூலம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் அதன் மூலம் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வினை உருவாக்க வேண்டும். நாங்கள் நம்புகிறோம் ஜானாதிபதி அவர்களின் நோக்கமும் எதிர்பார்ப்பும் இவ்வாறுதான் இருக்கின்றதென்று. அவர் போதித்ததை செயலில் காட்டவேண்டிய தருணம் இதுவென்று நம்புகிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் தகவல் மைய ஊடக பிரிவு. மின்னஞ்சல்: slmic@hotmail.co.uk

0 comments:

Post a Comment