அசைய முடியாத நிலையில் உலகின் அதிக எடையுள்ள பெண்

Saturday 29 January 2011

அமெரிக்காவைச் சேர்ந்த டெறி ஸ்மித் வயது (49) என்பவர் உலகிலேயே அதிக எடை மிகுந்த பெண்ணாக காணப்படுகிறார். இவரது உடலின் மொத்த நிறை 700 இறாத்தல்களாகும் (317 கிலோகிராம்)

உடலின் அதிக நிறை காரணமாக அவரது படுக்கையறையில் அசைவற்றுக் கிடக்கிறார். அவரால் அசைவதற்கு, நிற்பதற்கு அல்லது அவரது நாளாந்த கடமைகளையே செய்துக்கொளள்ளமுடியாதளவிற்கு அவரது நிறை அதிகமாக காணப்படுகின்றது.

அவர் தலைவலியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மூளையில் கட்டி ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கு அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனிங் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் அவரது உடல் மிகவும் பெரிதாக இருப்பதால் ஸ்கேனிங் இயந்திரத்தில் அவரை ஏற்றுவதற்கோ வைத்தியசாலையின் கதவுகளுக்கூடாக கொண்டு செல்வதற்கோ முடியாமல் உள்ளது.

அவர் தற்போது 44 வயதுடைய தனது கணவர் மிரோனுடன் வசித்து வருகிறார்.. டெறியின் மூத்த மகளுக்கு 30 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருவரும்தான் டெறியை குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, உணவும் ஊட்டுகின்றனர்.

'என்னுடைய பாதுகாவலர் எனது கணவர்தான். அவர் என்னுடைய ஒவ்வொரு தேவைகளுக்காகவும் என்னிடம் சிக்கியுள்ளார். பெரும்பாலான ஆண்கள் நீண்ட காலத்திற்கு முன்பே விலகிச்சென்றிருப்பார்கள். அவர்களை யாரும் குறைசொல்லவும் முடியாது. ஆனால், மிய்ரன் நல்ல கணவராக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார். அவர் வாழும் புனிதர்' என டெறி ஸ்மித் கூறுகிறார்.

டெறி எப்போதும் அதிக எடையுள்ள பெண்ணாக இருந்துள்ளார். அவர் 7 வயதாக இருக்கும்போதே அவரது உடல் நிறை 70 கிலோகிராமாக இருந்தது.

அவளது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அதனால் அவளது பெற்றோர்களால் ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடியவில்லை.

டெறிக்கு வயது 20 ஆக இருக்கும்போது அவளது நிறை 120 கிலோகிராமாக இருந்தது.

அவர் 1986 ஆம் ஆண்டு முதல் மைரோனை திருமணம் செய்தார். மைரோன் பாதுகாவலன் என்ற முறையில் அவரை பராமரித்து வருகிறார். மற்றும் டெறிக்கு வயது 32 ஆக இருக்கும் போது அவளது முழங்கால்களில் மூட்டுவீக்கம் ஏற்பட்டது.

நடமாடுவதற்கு சிரமமான நிலையில் இறுதியாக அவருக்கு சக்கர கதிரை வழங்கப்பட்டது. போதிய உடற்பயிற்சியின்மையால் அவரின் எடை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே வந்தது.

இப்போது கிளீவ்லாண்ட் மிருகக் காட்சிச் சாலையில் மிருகங்களின் சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களை டெறி ஸ்மித்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.

0 comments:

Post a Comment