சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள்

Sunday 30 January 2011

 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாவனையிலுள்ள நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போது பாவனையில் இருக்கும் 20,50,100,500, 1000,2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் சிறீலங்காவில் இதுவரை பாவனையில் இல்லாத ஐயாயிரம் ரூபா பெறுமதியான நாணயத்தாளும் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நாணயத்தாள்கள் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் நாள் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். சிறீலங்காவின் அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பன புதிய நாணயத்தாள்களில் இடம்பெற்றுள்ளன.

0 comments:

Post a Comment